நாளை முதல் விண்ணப்பிக்கலாம்... பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் நகல்...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 8-ந்தேதி, இந்த ஆண்டுக்கான பன்னிரெண்டாம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில்,தற்காலிக மதிப்பெண் பட்டியல் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படுகிறது.

அவற்றை மாணவர்கள், தனித் தேர்வர்கள் தேர்வுத்துறை இணைய தளத்தில் (www.dge.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி, விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவ மற்றும் மாணவிகள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 17-ந்தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு கட்டணமாக அனைத்து பாடங்களுக்கு ரூ.275 செலுத்த வேண்டும். மேலும், நகல் பெற்றதும், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

You can apply from tomorrow Copy of 12th standard answer sheet


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->