உலக மூளைக்காய்ச்சல் தினம்!.
World Brain Fever Day
உலக மூளைக்காய்ச்சல் தினம்!.
அக்டோபர் 5 ஆம் தேதி, உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கும் ஒரு கொடிய நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
உலக மூளைக்காய்ச்சல் தினம் ஏப்ரல் 24 க்கு பதிலாக அக்டோபர் 5 அன்று நினைவுகூரப்படுகிறது. 2030 ஆம் ஆண்டளவில் மூளைக்காய்ச்சலை தோற்கடிக்க WHO இன் முன்முயற்சியை ஆதரிக்க புதிய அர்ப்பணிப்பு தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது .
மூளைக்காய்ச்சலின் சோகம் என்னவென்றால், தடுப்பூசி மூலம் தடுக்கலாம் மற்றும் விரைவாகவும் துல்லியமாகவும் கண்டறியப்பட்டால் சிகிச்சையளிக்க முடியும். ஆயினும்கூட, மூளைக்காய்ச்சல் தடுப்புக்கான முன்னேற்றம் மெதுவாக உள்ளது,

முகலாயகளுக்கு எதிராக தனது படை வீரர்களை வழி நடத்திச் சென்று சாதுரியமாகப் போர் புரிந்த வீராங்கனை ராணி துர்காவதி அவர்கள் பிறந்ததினம்!.
ராணி துர்காவதி (அக்டோபர் 5, 1524 - ஜூன் 24, 1564) அன்றைய கோண்ட்வானா தேசத்தை (இன்றைய மத்தியப் பிரதேசம்) ஆண்டவர். கோண்ட்வானாவை ஆண்ட தல்பத் ஷா 1548 ஆம் வருடம் இறந்த பிறகு, அவரது சிறு குழந்தை பீர் நாராயண் ஆட்சிக்கு அமர்த்தப்பட்டார். ராணி துர்காவதி, தனது மகனுக்குத் துணையாக 1548 முதல் 1564 வரை பதினாறு வருடங்கள் மிகவும் சாமர்த்தியத்துடன் ஆட்சியை நடத்தினார். ஆனால், 1564 ஆம் வருடம் முகலாய மன்னர் அக்பரின் படையெடுப்பிற்குப் பலியாகி விட்டது கோண்ட்வானா நாடு.
அக்பர், தனது தளபதி அஸஃப் கானை கோண்ட்வானா நாட்டுக்கு அதிபதியாக்கினார்.படையெடுத்து வரும் முகலாய வீரர்களுக்கு எதிராக ராணி துர்காவதி தனது படை வீரர்களை வழி நடத்திச் சென்றார். எத்தனையோ சாதுரியமாகப் போர் புரிந்தும், தனது தோல்வி நிச்சயம் என்பது ராணி துர்காவதிக்குத் தெரிய வந்தது. எதிரியின் கையால் சாவதைவிட தன் உயிரை மாய்த்துக் கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்த ராணி துர்காவதி, ஒரு கத்தியால் தன்னைத் தானே குத்திக் கொண்டு இறந்தார்.