திருச்சி அருகே பரிதாபம்..! மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

திருச்சி மாவட்டம் உறையூர் தெற்கு மாதுளம் கொல்லை பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் தொழிலாளி ரஞ்சித் குமார் (33). இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் ரஞ்சித் குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன்-மனைவி இடையே இது தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து மீண்டும் இவர்களிடையே தகராறு ஏற்பட்டதால் மனைவி சத்யா கணவரை பிரிந்து அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் மன வேதனையை அடைந்த ரஞ்சித் குமார் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாத போது ரஞ்சித் குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உறையூர் போலீசார் ரஞ்சித் குமாரின் உடலை கைப்பற்றிய பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Worker commits suicide in Trichy


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->