அடக்கடவுளே..!!! மரம் முறிந்து விழுந்ததில் 2 பேர் மரணம்...!
2 people died when a tree fell
திருவண்ணாமலையில் கழனிப்பாக்கம் பகுதியில், 100 நாள் பணியாளர்கள் வேலையை முடித்தபின்னர்,ஆலமரத்தடியில் இளைப்பாறிக்கொண்டிருந்தனர்.

அப்போது பலத்த காற்று வீசியதால், ஆலமரக்கிளை திடீரென முறிந்து அங்கு அமர்ந்து இருந்தவர்கள் மீது விழுந்தது.இந்த ஆலமரக்கிளை முறிந்து விழுந்ததில் அன்னபூரணி மற்றும் வேண்டா ஆகிய 2 பெண்கள் உயிரிழந்தனர்.
மேலும் அங்கு இளைப்பாறிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் மரக்கிளையை அகற்றி, தொழிலாளர்களின் உடல்களை அங்கிருந்து மீட்டனர்.
மேலும் அங்கு இறந்த உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில்,படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து காவலர்கள் மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
2 people died when a tree fell