மாணவர்களிடம் உரையாடிய மருத்துவர்.! நொடியில் நடந்த விபரீதம்.! - Seithipunal
Seithipunal


மாணவர்களிடம் உரையாடிய மருத்துவர்.! நொடியில் நடந்த விபரீதம்.!

சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனை மருத்துவக் கல்லுாரியில் பேராசிரியையாகவும், மருத்துவ கண்காணிப்பாளராகவும், பணியாற்றி வந்தவர் புவனேஸ்வரி. 

திருமணமாகாத இவர், மருத்துவமனை வளாகதிற்கு அருகே உள்ள குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில் கல்லூரி வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எம்.பி.பி.எஸ் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது, மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த புவனேஸ்வரி, திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை, சக மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக நரம்பு மண்டலம் வெடித்து, உயிரிழந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, மருத்துவர் புவனேஸ்வரியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, மருத்துவர் புவனேஸ்வரியின் உடல் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக மருத்துவமனை வளாகத்தில், வைக்கப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

woman doctor died in chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->