அரியலூர் - உணவு சமைக்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்.!
woman died for Epilepsy attack in ariyalur
அரியலூர் - உணவு சமைக்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்.!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் அருகே கொலையனூர் தெற்கு தெருவை சேர்ந்தவர்கள் பூமிநாதன்-குணமல்லி தம்பதியினர். இவர்களில் குணமல்லி கடந்த சில ஆண்டுகளாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் குணமல்லி கடந்த 14-ந் தேதி தனது வீட்டின் வெளியே விறகு அடுப்பில் உணவு சமைப்பதற்காக வெந்நீர் வைத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில் குணமல்லியின் கால்பட்டு அடுப்பில் இருந்த வெந்நீர் பானை அவர் மீது சாய்ந்து தண்ணீர் கொட்டியது. இதனால், அவருக்கு பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் குணமல்லியை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இருப்பினும், குணமல்லி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு மருத்துவமனை சார்பில் தகவல் அளிக்கப்பட்டது. அதன் படி விரைந்து வந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
woman died for Epilepsy attack in ariyalur