வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பலி..! ஈரோடு அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


வீட்டின் மேற்கூரையில் இருந்து பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு திருமணமாகி இந்துமதி என்ற மனைவியும் கருநாதன் என்ற மகனும் உள்ளனர்.பெருமாள் அங்குள்ள அரசு அலுவலர் பயிற்சி பள்ளியில் தோட்ட வேலை செய்து வருகிறார். 

இந்நிலையில், இந்துமதி தனது மகனுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராதவிதமாக மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman death near Erode


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->