மூன்றாவதும் பெண் குழந்தை.. சட்டவிரோதமாக கருகலைப்பு செய்தவருக்கு நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்..! - Seithipunal
Seithipunal


சட்டவிரோதமாக கருக்கலைப்பு மருந்து வாங்கி சாப்பிட்ட பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் வசித்து வருபவர் வேல்முருகன் அனிதா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் மூன்றாவது முறையாக கருவுற்றிருந்தார். இதனைத்தொடர்ந்து பிறக்கப்போகும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறிய கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமனத்தம் பகுதிக்கு இந்த தம்பதியினர் வந்துள்ளனர்.

அங்கு கருவில் உள்ளது பெண்குழந்தை என தெரிவித்துள்ளனர். மூன்றாவதும் பெண் குழந்தையா என எண்ணி அவர்கள் அந்த கருவை கலைக்க திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து கடலூர் கிராமத்தில் உள்ள முருகன் என்பவருக்கு சொந்தமான மெடிக்கல் கடையில் அனிதாவிற்கு கருகலைப்பு செய்துள்ளனர். அனிதாவின் உடல்நிலை மோசமானதால் சந்தேகம் அடைந்த அவரது கணவர் இதுகுறித்து முருகனிடம் தெரிவித்தார்.

உடனடியாக முருகன் அவர்களை அங்கு உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுக்கவே அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அனிதா பரிதாபமாக உயிரிழந்தார்.

 இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் முருகன் பட்டப் படிப்பு மட்டுமே முடித்துவிட்டு மெடிக்கல் கடை வைத்திருந்தது தெரியவந்தது இதனையடுத்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Death In Cuddalore


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->