எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
bomb thread ADMK EPS home
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கையாக உள்ளன.
இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வீட்டிற்கும் மர்ம நபர் ஒருவர் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அந்த மிரட்டல் மெயில் வந்ததும் காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, வீட்டை சுற்றிவளைத்து தீவிர சோதனை நடத்தினர்.
சோதனையின் போது எந்தவித வெடிகுண்டும் அல்லது சந்தேகத்திற்கிடமான பொருள்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் மூலம் மிரட்டல் ஒரு வெறும் புரளி என போலீசார் உறுதி செய்தனர்.
அதே சமயம், மிரட்டல் அனுப்பிய மெயில் முகவரி அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மிரட்டல் கடிதத்தை அனுப்பிய நபரின் இருப்பிடம் மற்றும் அடையாளத்தை கண்டறிய சைபர் குற்றப்பிரிவு இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் இதேபோன்ற மிரட்டல்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர் விஜய், நடிகை திரிஷா உள்ளிட்ட பலரது வீடுகளுக்கும் வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், இமெயில் வழி மிரட்டல் சம்பவங்கள் போலீசாருக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன.
இந்த தொடர்ச்சியான மிரட்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, மாநில போலீசார் இணைய பாதுகாப்பு கண்காணிப்பை மேலும் வலுப்படுத்தி வருகின்றனர்.
English Summary
bomb thread ADMK EPS home