வேறு ஒருவருடன் கள்ளக்காதல்: கணவர் கண்டிப்பு.. மனைவி எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி பிரேமா(34). இந்நிலையில் பிரேமாவுக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மேஜர் பாபு என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையறிந்த கணவர் சரவணன், பிரேமாவை கண்டித்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக கள்ளத்தொடர்பை முறித்துக் கொண்ட பிரேமா, மீண்டும் மேஜர் பாபுவுடன் பேசியுள்ளார்.

இதையடுத்து மேஜர் பாபுவின் உறவினர்கள், இதுதொடர்பாக சரவணனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் மீண்டும் மனைவியை கண்டித்துள்ளார். இந்நிலையில் கோபித்துக் கொண்டு சேலம் வந்த பிரேமா, திருவாக்கவுண்டனூர் நெடுஞ்சாலையோரம் மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் பிரேமாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் பிரேமா விஷம் குடித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பிரேமாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் பிரேமா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து சூரமங்கலம் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Wife commits suicide by drinking poison in salem


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->