சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு.. வெடிவிபத்தில் ஒருவர் பலி.. 5 க்கும் மேற்பட்டோர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


வீட்டில் வைத்து திருட்டுத்தனமாக தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறி ஏற்பட்ட விபத்தில், ஒருவர் பலியாகினார். 6 பேர் படுகாயமடைந்தனர். 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் தாயில்பட்டி எஸ்.வி. எம் தெரு பகுதியை சார்ந்தவர் பாலமுருகன். இவர் பட்டாசு தயாரிக்கும் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவரது வீட்டிற்குள் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வந்ததாக தெரியவருகிறது. 

இன்றும் வழக்கம்போல 7 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வீட்டிற்குள் பட்டாசு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அதன்போது, திடீரென பட்டாசு வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில், சண்முகராஜ் என்ற தொழிலாளி, 100 விழுக்காடு காயத்துடன் பாதிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினார். 

வெடிச்சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை முதற்கட்டமாக மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சண்முகராஜ் இறந்துபோனது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து, எஞ்சியுள்ள பிறருக்கு மருத்துவமனையில் தீவிர சிக்சிஹாய் அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக தகவலை அறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு படையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா? என சோதித்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த விபத்தில், இதே தெருவை சார்ந்த செல்வமேரி, முத்து முனீஸ்வரி, சுகந்தி, கீதாலட்சுமி, முத்துராஜ், பாலமுருகன், முத்துச்செல்வி ஆகியோர் படுகாயமடைந்து இருக்கின்றனர். மேலும், அருகே இருந்த வீடும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar Sathur Thayilpatti Firework Accident 1 Died 6 Injured


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->