திண்டிவனம்: துக்க வீட்டிற்கு வருகையில் அரங்கேறிய பெரும் சோகம்... பரிதாபமாக பறிபோன உயிர்கள்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள வேளச்சேரி பகுதியை சார்ந்தவர் சுப்புலட்சுமி. இவருக்கு சொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை. சுப்புலட்சுமியின் குடும்பத்தினர் துக்க நிகழ்ச்சிக்காக சென்னைக்கு வந்து கொண்டு இருந்துள்ளனர். 

இந்நிலையில், இவர்களின் கார் இன்று காலை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் கன்னிகாபுரம் பகுதியில் வந்து கொண்டு இருந்துள்ளது. இதன்போது கார் வேகமாக சென்று கொண்டு இருந்த நிலையில், முன்னாள் சென்ற லாரியின் பின்புறத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சுப்புலட்சுமி (50), கவுதம் (வயது 35), வேல்பாண்டி (வயது 40) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். காரில் வந்த இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். 

இவர்கள் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Viluppuram Tindivanam Road Accident Police Investigation


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->