தஞ்சாவூர் || செருப்பை எடுத்து வா - ஆட்சியர் ஆய்வில் விவசாயிக்கு நேர்ந்த அவலம்.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருமலை சமுத்திரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் நேற்று ஆய்வு செய்துள்ளார். அந்த நேரத்தில் இவருடன் வட்டாட்சியர் சக்திவேல், ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டவர்கள் இருந்தனர். 

இந்த நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் நூலக வாசலில் விட்டுச் சென்ற தனது செருப்பை எடுத்து வருமாறு விவசாயி ஒருவரிடம் தெரிவித்து இருக்கிறார்.

அதன் படி அந்த விவசாயி நூலக வாசலில் கிடந்த செருப்பை ஆய்வு நடைபெறும் இடம் வரை கையிலேயே எடுத்துச் சென்று ஊராட்சி மன்றத் தலைவரிடம் கொடுத்தார். அந்த செருப்பை அணிந்து கொண்டு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆட்சியருடன் ஆய்வுக்கு சென்றார். 

ஊராட்சி மன்றத் தலைவரின் இந்த கொடூரச் செயலை அங்கிருந்த அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவும், கண்டிக்கவும் இல்லை. விவசாயி ஒருவரை மரியாதை குறைவாக ஊராட்சி மன்றத் தலைவர் நடத்திய செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

village president told bring shoes to farmer in thanjavur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->