தர்மபுரியில் பரபரப்பு.! கிராம நிர்வாக அலுவலர் திடீர் தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை...! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் அரூர் கோட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி விஜயா. இவர்களது இரண்டாவது மகன் மகிலன் சின்னகவுண்டர்அள்ளி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் தாய் விஜயா உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த மகிலன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து விஜயா நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மகிலன் தூக்கில் பிணமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த மகிலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மகிலன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Village administrative officer commits suicide in dharmapuri


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->