அதிர்ச்சி விடியோ! பிஞ்சு மாணவனை சிமெண்ட் கலந்து, சித்தாள் வேலை செய்யவைத்த அரசு பள்ளி!
vaniyambady Govt School Student in labour work shocking video
வாணியம்பாடி சி.வி. பட்டறை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. பள்ளியின் மேல்தள கட்டிடப் பணியில், சீருடையுடன் சில மாணவர்கள் ஈடுபட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதுகுறித்து விளக்கம் அளித்த தலைமையாசிரியை சோபனா, சமீபத்திய மழையால் வகுப்பறையில் நீர் ஒழுகியதால், அதனை சரிசெய்ய சில தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். அந்த வேளையில், தூய்மை பணியாளர்களுடன் மாணவர்களும் உதவ முன்வந்ததாகவும், இதனை கண்ட பிறகு உடனடியாக அவர்களை பணியில் இருந்து விலக்கி வகுப்பறைக்கு அனுப்பியதாகவும் கூறினார்.
சம்பவம் குறித்து உள்ளூர் மக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. மாணவர்களை கட்டிடப் பணியில் ஈடுபடுத்துவது குறித்து விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில், பள்ளி நிர்வாகம் இது மாணவர்களின் உதவி மட்டுமே என்று விளக்கம் அளித்துள்ளது.
English Summary
vaniyambady Govt School Student in labour work shocking video