இருசக்கர வாகனத்தின் மீது மோதி ஆட்டோ கவிழ்ந்து விபத்து - 4 பேர் படுகாயம் - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மோதி ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மயிலம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேல் (57). இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி மஞ்சுளா (50). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, திண்டிவனம் காவல் நிலையம் அருகே, விழுப்புரம் நோக்கி சென்ற ஆட்டோ ராஜவேல் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி தலைக்குப்பிற கவிழ்ந்து. 

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ராஜவேல், அவரது மனைவி மஞ்சுளா, ஆட்டோவில் பயணம் செய்த ராஜன் தெருவைசேர்ந்த யாகவல்லி, ஆட்டோ ஓட்டுநர் பாஸ் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். 

இவர்கள் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் ஆட்டோ ஓட்டுநர் பாஸ் குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், விபத்தை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Twowheeler auto accident in tindivanam


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->