யூடியூபர் வாசன் ஜாமீன் மனு! அதிரடி காட்டிய நீதிபதி!  - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் அடுத்துள்ள தாமல் பகுதி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பிரபல யூட்யூபர் டி.டி.எப் வாசன் கடந்த 17ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று சாகசம் செய்ய முயன்றார். 

அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். இதனால் அவர் மீது பாலுசெட்டிசத்திரம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் அவர் தனக்கு ஜாமீன் வழங்க கோரி கடந்த 21ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி அவருக்கு ஜாமீன் மனு வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார். தனக்கு ஜாமீன் மனு வழங்க வேண்டும் என யூட்யூபர் வாசன் மீண்டும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்நிலையில் அவரது ஜாமின் மனுவை நீதிபதி இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttf vasan bail petition 2nd time dismissed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->