திருச்சியில் கொடூரம்: கடன் தொல்லையால் 2 குழந்தைகளுடன் கணவன் - மனைவி தற்கொலை!
Trichy Husband and wife and childs suicide
திருச்சி அருகே மேல கல்கண்டார் கோட்டையில் கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பையும் பேரசோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மூப்பனார் நகர் பகுதியை சேர்ந்த ஜோசப்பின் மகன் அலெக்ஸ் (வயது 45), ஜவுளி வியாபாரி. அவரது மனைவி விக்டோரியா (வயது 35), ரயில்வே ஊழியர். அவர்களுக்கு ஆராதனா (வயது 9), ஆலியா (வயது 3) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
புதன்கிழமை காலை வீடு திறக்கப்படாததை பார்த்த அண்டை அயலோர், கதவை உடைத்துப் பார்த்தபோது, அலெக்ஸ் மற்றும் விக்டோரியா தூக்கில் தொங்கிய நிலையில், குழந்தைகள் இருவரும் விஷம் அருந்தி உயிரிழந்திருந்தனர். உடனடியாக பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், அலெக்ஸின் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம், தாயின் புற்றுநோய் சிகிச்சை செலவுகள், தம்பிக்காக எடுத்த கடன் ஆகியவற்றால் கடன் சுமை அதிகமாகியிருந்தது தெரியவந்தது.
மேலும், புதிதாக கட்டிய வீட்டுக்கான கடனை விக்டோரியாவின் தாயார் பென்ஷன் மூலம் செலுத்தி வந்த நிலையில், அவரும் இறந்துவிட்டதால் தவணை செலுத்த முடியாமல் மன அழுத்தம் அதிகரித்தது.
இதன் காரணமாக தம்பதியினர், குழந்தைகள் மீது விஷம் கொடுத்து கொலை செய்து, பின்னர் தற்கொலை செய்துகொண்டதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
Trichy Husband and wife and childs suicide