திருச்சி அருகே திமுக பிரமுகர் அடித்து கொலை! வெளியான அதிர்ச்சி பின்னணி! - Seithipunal
Seithipunal


திருச்சி அருகே திமுக பிரமுகர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி, கீழ தேவதானம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் பிரித்விராஜ் (48 வயது) இன்று அடுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீட்டு மாடியில் உள்ள அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரித்விராஜ் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கிடையே வெளியான முதல் கட்ட தகவலின் படி, பிரித்விராஜ் மற்றும் அவரின் சகோதரர் ரமேஷ் இடையே இன்று காலை தகராறு ஏற்பட்டதாகவும், இதனை தொடர்ந்து அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், ஆளும் கட்சியின் பிரமுகர் ஒருவரே குடும்பப் பிரச்சனையில் அடித்து பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trichy DMK Member Prithviraj Murder case


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->