ஊழல் முறைகேடுகளை தடுக்க சூப்பர் ஐடியா: உலகின் முதல் ஏ.ஐ., அமைச்சரை நியமித்துள்ள அல்பேனிய அரசு..! - Seithipunal
Seithipunal


செயற்கை நுண்ணறிவு (AI) அமைச்சரை, அல்பேனியா அரசு நியமித்துள்ளது. இந்த AI அமைச்சர், ஒப்பந்தப் பணிகளில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை, 100 சதவீதம் தடுக்க வழிவகுக்கும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அல்பேனியாவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் சோஷலிஸ்ட் கட்சி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இதன் வாயிலாக தொடர்ந்து நான்காவது முறையாக அந்நாட்டின் பிரதமராக எடி ரமா பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் சோஷலிஸ்ட் கட்சி கூட்டம் நடந்த போது AI அமைச்சருக்கான அறிவிப்பை பிரதமர் எடி ரமா வெளியிட்ட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

ஏஐ தொழில்நுட்பத்தின் வாயிலாக 'டியெல்லா' என்ற அமைச்சரும் இந்த அரசில் அங்கம் வகிப்பார் என்று கூறியுள்ளார். அதாவது, 'டியெல்லா' என்றால் அல்பேனிய மொழியில் சூரியன் என்று அர்த்தம். இந்த AI அமைச்சர் மெய்நிகர் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவர், அரசு ஒப்பந்தப் பணிகள் தொடர்பான அனைத்து முடிவுகளையும் நிர்வகிப்பார் என்றும், இதன் வாயிலாக 100 சதவீதம் ஊழல் முறைகேடுகள் இன்றி, ஒப்பந்த புள்ளிகள் சமர்ப்பிக்கப்படும் என்றும், ஒவ்வொரு பொது நிதியும் முற்றிலும் வெளிப்படையானதாக அமையும் என்று அல்பேனியா பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனவரியில், அந்நாட்டு அரசின் டிஜிட்டல் உதவியாளராக அறிமுகப்படுத்தப்பட்ட டியெல்லா, இதுவரை 36,600 டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் சுமார் 1,000 சேவைகளை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Albanian government has appointed the worlds first AI minister


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->