நாளை திருமணம்... இன்று விபத்தில் மணப்பெண் உயிரிழப்பு: திண்டுக்கல் அருகே சோகம்!
Tragedy Before Wedding: Bride Dies in Dindigul Road Accident as Car Tire Bursts Groom Injured
திண்டுக்கல் மாவட்டம் வாடிப்பட்டி அருகே நடைபெற்ற கோர சாலை விபத்தில், நாளை திருமணம் நடைபெறவிருந்த மணப்பெண் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தின் பின்னணி: மதுரையில் நடைபெறவுள்ள செவிலியர் தேர்வை எழுதுவதற்காக, மணமகள் வென்சியாஜாவை (26) மணமகன் ஜெபாஸ்டியன் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார்.
டயர் வெடிப்பு: வாடிப்பட்டி அருகே திண்டுக்கல் - மதுரை தேசிய 4 வழிச்சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, கோவையில் இருந்து மதுரை நோக்கி வந்த காரின் இடதுபுற முன்பக்க டயர் திடீரென வெடித்தது.
மோட்டார் சைக்கிள் மீது மோதல்: டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, ஜெபாஸ்டியன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
உயிரிழப்பு மற்றும் சிகிச்சை: இந்த விபத்தில் வென்சியாஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ஜெபாஸ்டியன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாளை திருமணம் நடக்கவிருந்த மகிழ்ச்சியான சூழலில், எதிர்பாராதவிதமாக நடந்த இந்த விபத்து இரு வீட்டார் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tragedy Before Wedding: Bride Dies in Dindigul Road Accident as Car Tire Bursts Groom Injured