தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை பதற வைத்த திமுக கூட்டணி கட்சியின் அதிரடி போராட்டம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  சுங்கச்சாவடி கட்டண உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தப்பட்டது.

செங்கல்பட்டில், பரனூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மமக தலைவர் ஜவார்ஹிருல்லா தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை மறித்து 400க்கும் மேற்பட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடியில் மமக பொதுச்செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான அப்துல் சமது உள்ளட்ட 700க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை: மமக சார்பில் நடைபெற்ற சுங்கச்சாவடி கட்டண கொள்ளை தொடர்பான போராட்டம் முடிந்து கலைந்து செல்லும் போது, மமக தொண்டர்கள் திடீரென காவலர்களின் தடுப்பை மீறி கணியூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இந்த போராட்டங்களில் சில சுங்க சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TollGate Paranur Kovai Police MMN Protest


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->