சுங்கச்சாவடி வருடாந்திர பாஸ் ரூ.3000! ஆனால் ஒரு நிபந்தனை!
Toll gate yearly pass
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்க 'பாஸ்டேக்' என்ற டிஜிட்டல் முறையை மத்திய அரசு ஏற்கனவே அறிமுகப்படுத்தியது. வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் ஸ்டிக்கர், சுங்கச் சாவடிகளில் ஸ்கேன் செய்யப்பட்டு, பயணியின் வங்கிக் கணக்கிலிருந்து கட்டணம் தானாகவே பிடிக்கப்படும். இதனால், நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் அவசியம் இல்லாமல், வாகன ஓட்டம் எளிதாக நடைபெறுகிறது.
இந்நிலையில், பாஸ்டேக் பயனர்களுக்காக புதிய வருடாந்திர பாஸ் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. ரூ.3000 கட்டணம் செலுத்தினால், ஒரு வருடம் முழுவதும் அல்லது 200 முறை வரை சுங்கக் கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்யலாம் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
இந்த புதிய திட்டம் வருகிற ஆகஸ்ட் 15 முதல் அமலுக்கு வருகிறது. cars, jeeps, vans போன்ற தனியார் வணிக வாகனங்களுக்கே இது பொருந்தும் என்றும் அவர் தெரிவித்தார். புதிய பாஸ் முறை, பயணச் செலவை குறைத்து, தொடர்ந்த பயணத்திற்கான வசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.