திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப்பிற்கு "பசுமை விருது!
To the Tiruvallur District Collector M Prathap Green Award
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றியமைக்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப்பிற்கு "பசுமை விருது" வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவித்தார் :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றியமைக்காக "பசுமை விருதினை" திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப்புக்கு வழங்கி கௌரவித்தார்.
தமிழ்நாடு பசுமை விருது சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சிறந்த நடவடிக்கை எடுக்கும் மாவட்ட நிர்வாகத்தை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பாக சிறந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.
அதன் அடிப்படையில் கடந்த 2023-2024 ஆண்டில் தொழிற்சாலைகளில் மாசுபாட்டை கட்டுப்படுத்துதல், பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த விதிகளை நடைமுறைப்படுத்துதல், நெகிழி கழிவுகள் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் மேலாண்மை, நீர் நிலைகளை புதுப்பித்தல், நெடுஞ்சாலைகளை சுத்தப்படுத்துதல், கடலோர மாசுக்கட்டுப்பாடு நடவடிக்கைகள் போன்ற சுற்றுச்சூழல் சார்ந்த நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பசுமை விருது வழங்கி கௌரவித்தார்.
English Summary
To the Tiruvallur District Collector M Prathap Green Award