மீண்டும் பீதியை கிளம்பியுள்ள ஏர் இந்தியா விமானம்: தொழில்நுட்ப கோளாறு: ஓடுபாதையில் 01 மணி நேரம் நிறுத்தி வைப்பு..! - Seithipunal
Seithipunal


கொல்கட்டா விமான நிலையத்தில் இருந்து காசியாபாத்திற்கு ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX 1511 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. ஆனால், தொழிநுட்ப கோளாறு காரணமாக விமான ஓடுபாதையிலேயே 01 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் என்ன கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறியும் பணியில் இறங்கியுள்ளனர். இந் நிலையில் இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு கூறியுள்ளதாவது: 

கொல்கட்டா, ஹிண்டன் விமானம் அறிவிக்கப்பட்ட நேரத்தில் புறப்டவில்லை. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் தாமதமாக இயக்கப்பட்டது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தை மாநிலம் ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதில் 274 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்த சில நாட்களில், மீண்டும் ஏர் இந்தியா விமானம் புறப்படும் தருவாயில் கோளாறு ஏற்பட்டு நிறுத்தப்பட்டுள்ளமை பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Air India flight grounded on runway for 1 hour due to technical glitch in Kolkata


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->