ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு: சீனா செல்லும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்..!
Union Defense Minister to visit China to participate in Shanghai Cooperation Organization summit
எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
எஸ்.சி.ஓ., அமைப்பில் இந்தியாவும் உறுப்பினர் ஆகவுள்ளது. இந்த அமைப்பின் மாநாடு இந்த மாத இறுதியில் சீனாவின் குயிங்டாவ் நகரில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும்படி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இதனை ஏற்று அவர் சீனா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வானில், இந்தியா- சீனா வீரர்களுக்கு இடையே நடந்த மோதலுக்கு பிறகு ராஜ்நாத் சிங் சீனா செல்வது இதுவே முதல்முறை. குறித்த மோதலுக்கு பிறகு நிலைமையை சரி செய்ய இருநாட்டு உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் 'ஆப்பரேஷன் ரைசிங் லயன்' தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.
English Summary
Union Defense Minister to visit China to participate in Shanghai Cooperation Organization summit