ஈரானுக்கு வெளியே போரை விரிவுபடுத்த இஸ்ரேல் சதி: ஈரான் வெளியுறவுத்துறை குற்றசாட்டு..!
Irans Foreign Ministry accuses Israel of trying to expand the war outside Iran
ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஈரான் மீது கடந்த 13-ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக ஈரானின் ராணுவ தலைமையகம் மற்றும் அணுசக்தி நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி வருவதால், 03-வது நாளாக இருநாடுகளுக்கு இடையே போர் நீடித்து வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை ஈரானில் 80 பேரும், இஸ்ரேலில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஈரானுக்கு வெளியே போரை விரிவுபடுத்த இஸ்ரேல் முயற்சி வருவதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்ரேலின் ஜெருசலம், டெல் அவிவ் நகரில் ஈரானும் தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையில், அந்தப் பகுதிகளில் தாக்குதலுக்கான சைரன் ஒலித்துக் கொண்டு உள்ளது. இஸ்ரேலின் எரிசக்தி உள்கட்டமைப்புகள், போர் விமானங்களுக்கு எரிபொருள் தயாரிப்பு நிலைகளை குறிவைத்து தாக்குதல் ஈரான் தாக்குதல் நடத்துகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையாக 03-வது நாளாக இஸ்ரேல் வான் எல்லைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் உள்ள தென் பார்ஸ் பகுதியில் கத்தாருடன் சேர்ந்து மிகப்பெரிய அளவில் எரிவாயு சேமிப்பு மையத்தை அமைத்துள்ளது. இதன்மூலம் உள்நாட்டு இயற்கை எரிவாயு தேவையில் 70% பூர்த்தி செய்யப்படுகிறது. இந்தத் தளத்தின் மீது இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதால், தாக்குதலுக்குப் பிறகு பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது, 'இந்த தாக்குதல் மிகப்பெரிய தவறு. அரேபிய வளைகுடாவில் மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானுக்கு வெளியே இந்தப் போரை விரிவுபடுத்த இஸ்ரேல் முயற்சிக்கிறது,' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Irans Foreign Ministry accuses Israel of trying to expand the war outside Iran