நாட்டுப்புற கலைஞர் கொல்லங்குடி கருப்பாயி மறைவு! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகி மற்றும் திரைப்பட நடிகை கொல்லங்குடி கருப்பாயி (வயது 99) இன்று வயது மூப்பால் உயிரிழந்தார்.

கலைமாமணி விருது பெற்ற இவர், 1993 முதல் மக்கள் மனங்களில் தனி இடம் பெற்றிருந்தார். ‘ஆண் பாவம்’, ‘கபடி கபடி’, ‘ஆயுசு நூறு’, ‘கோபாலா கோபாலா’ போன்ற படங்களில் நடித்ததோடு, பல நினைவில் நிறைந்த நாட்டுப்புற பாடல்களை பாடி சிறப்பித்தவர்.

அகில இந்திய வானொலியில் நிகழ்கலைஞராக தனது கலைப் பயணத்தை தொடங்கி, தொடர்ந்து 30 ஆண்டுகள் பாடல்களாலும், நாடகங்களாலும் பக்தர்களின் உள்ளங்களை கவர்ந்தார். 'கானாங்குருவி கூட்டுக்குள்ளே' உள்ளிட்ட பாடல்களில் அவருடைய தனித்துவமான குரல் பெரும் வரவேற்பைப் பெற்றது.

திரைப்படப் பாடல் பதிவு செய்ய மதுரை சென்றபோது கணவரை இழந்தார். அதன் பின்னர் திரைத்துறையிலிருந்து விலகினார். ஒரே மகளும் சாலை விபத்தில் உயிரிழந்ததால், தனிமையில் வாழ்க்கை நடத்தினார்.

இந்நிலையில், இன்று அவரது சொந்த கிராமமான கொல்லங்குடியில் உள்ள இல்லத்தில் இயற்கை மரணமடைந்தார். அவரின் மறைவு நாட்டுப்புறக் கலை உலகுக்கு பேரிழப்பாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kollankudi karupayi death


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?


செய்திகள்



Seithipunal
--> -->