உலக அரங்கில் ஓர் உலக மொழியாகப் தமிழ்மொழி பரிணமிக்க வேண்டும்: ஆளுநர் ரவி பேச்சு..! - Seithipunal
Seithipunal


தமிழாகி ஆளுநர் மாளிகையில் 'எண்ணித் துணிக' - பகுதி 18: என்ற உலகத் தமிழ் ஆளுமைகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 'உலக அரங்கில் தமிழ் மொழி உலக மொழியாகப் பரிணமிக்க வேண்டும்' என ஆளுநர் ரவி கூறியுள்ளார். 

அத்துடன், அங்கு உரையாற்றிய ஆளுநர் மேலும் கூறியதாவது, உலகின் மிகப் பழமையான வாழும் மொழி தமிழ் என்றும், ஆங்கிலேயர் ஆட்சியில் அதன் இயல்பு சிதைந்ததாகவும், கல்வி, தொழில், விவசாயம் என அனைத்தும் பாதிக்கப்பட்டன என்று பேசியுள்ளார். அத்துடன், தமிழ் ஒரு வெறும் மொழி மட்டுமல்ல, அது ஒரு ஆழமான பண்பாட்டு அடையாளம் என்றும் ஆங்கிலக் கல்வி முறையால் சமூகக் கட்டமைப்பில் உருவான தாழ்வு உணர்வை  ஆங்கிலேயர்களே ஊட்டினார்கள் என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திருவள்ளுவரை ஷேக்ஸ்பியருடன் ஒப்பிடுவது தவறு என்றும், தாய்மொழி வழிக் கல்வியே எளிதானதும் ஆழமானது. 2023-ஆம் ஆண்டு தாம் தமிழ் கற்கத் தொடங்கிய பிறகு, பொறியியல் மற்றும் மருத்துவப் பாடநூல்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமிழைப் பொழுதுபோக்காகக் கருதுவது போதாது; அதனை உலகளவில் பரப்ப வேண்டிய பணி இது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் உலகிற்கு வழிகாட்டியாக மாற வேண்டும் எனவும், தமிழ் ஒரு பொழுதுபோக்கிற்கான மொழி என்பதைத் தாண்டி, உலக அரங்கில் அது ஓர் உலக மொழியாகப் பரிணமிக்க வேண்டும் என்று தமிழாகி ஆளுநர் ஆர்.என்.ரவி மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Governor Ravi speech calls for Tamil to evolve into a global language on the world stage


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->