நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தாதா சாகேப் பால்கே விருது!
Dadasaheb Phalke Award allu arjun
2025 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற்றன. இதில், “பல்கலை வித்தகர்” (Most Versatile Actor) எனும் பெருமைமிக்க விருதை பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் வென்றார்.
இந்த விருதை பெற்றதையடுத்து அல்லு அர்ஜுன் தனது நன்றியை எக்ஸ் தளத்தில் (முன்னாள் Twitter) பகிர்ந்துள்ளார். “இந்த நம்பமுடியாத கௌரவத்திற்கு தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகளுக்கு என் இதயப்பூர்வ நன்றி. இந்த ஆண்டு பல்வேறு பிரிவுகளில் விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ரசிகர்களின் தொடர்ந்த ஆதரவும் அன்பும் எனக்கு மிகப்பெரிய பலம். இந்த விருதை என் ரசிகர்களுக்கே அர்ப்பணிக்கிறேன்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அல்லு அர்ஜுன் சமீபத்தில் வெளியிடப்பட்ட தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் (SIIMA 2025) தனது “புஷ்பா 2” திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதைவும் வென்றிருந்தார்.
“புஷ்பா 2” படத்தின் வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் தற்போது இயக்குநர் அட்லி இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்களும் திரைத்துறையும் எதிர்பார்க்கும் இந்த படம், அவரின் கேரியரில் மேலும் ஒரு மைல்கல்லாக அமையும் என கூறப்படுகிறது.
English Summary
Dadasaheb Phalke Award allu arjun