இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள அர்ஜுன் பாபுதா - ஆர்யா போர்சே: உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்தல்..! - Seithipunal
Seithipunal


03-வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனீச் நகரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி சார்பில் 36 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில் தமிழகத்தைப் பூர்விகமாக கொண்ட இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்றுள்ளார். அத்துடன்,  பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 03 பொசிஷன் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை சுருச்சி இந்தர் சிங் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்நிலையில், இன்று நடந்த கலப்பு அணி 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் பாபுதா மற்றும் ஆர்யா போர்சே அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

குறித்த ஜோடி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சீனாவின் ஷெங்க் லிஹாவ்-வாங்க் செபெய் அணியை 17-7 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற்றுள்ளது. இதன்மூலம் நடப்பு தொடரில் இந்திய அணி 02 தங்கம், 02 வெண்கலம் என 4 பதக்கங்களுடன் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. சீனா 04 தங்கம், ஒரு வெள்ளி, 02 வெண்கலம் என 07 பதக்கங்களுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian pair wins gold in World Cup shooting competition


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->