உத்தரகண்ட் ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


உத்தரகண்ட் மாநிலத்தில், கேதார்நாத் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த ஆர்யன் ஏவியேஷன் ஹெலிகாப்டர் இன்று அதிகாலை கௌரிகுண்ட் அருகே உள்ள காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளானது. மோசமான வானிலை காரணமாக குப்தகாசியில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் சோன்பிரயாக் அருகே விழுந்தது.

இந்த விபத்தில் விமானி, ஒரு குழந்தை உள்ளிட்ட 7 பேரும் உயிரிழந்துள்ளனர். அதிகாலை 5.20 மணியளவில் ஏற்பட்ட இந்த துயர சம்பவம், சார்தாம் யாத்திரை பருவத்தில் ஏராளமான பக்தர்கள் பயணிக்கும் நேரத்தில் நிகழ்ந்ததால் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நடைபெற்ற இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உடனடியாக விரைந்து, தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்துக்கு மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜூன் 12ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே நடந்த விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்த துயரச்செய்தி இன்னும் அடங்கும் முன், இந்த ஹெலிகாப்டர் விபத்தும் நாட்டில் கடும் கவலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Uttarakhand Helicopter accident


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->