தமிழகத்தில் போக்ஸோவில் 350 ஆசிரியர்கள் கைது! 50 பேர் பணிநீக்கம் - பள்ளிக் கல்வி இயக்குநர் தகவல்! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் நடந்த மாணவர்களின் வெற்றிக்கான சவால்கள், வழிமுறைகள் குறித்த கருத்தரங்கில் பேசிய பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன், தமிழகத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் இதுவரை 350 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதில் 50 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில், 8 வட்டாரங்களைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை வெளியிட்டனர். இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கண்ணப்பன், “ஆசிரியர்கள் மாணவர்களை குழந்தைகளாக நேசிக்க வேண்டும். பாடங்களை ஆர்வத்துடன் கற்றுத் தர வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு பிடித்த இடமாக மாற வேண்டும்,” என்றார்.

மேலும், 1,200 உடற்கல்வி ஆசிரியர்கள், 3,000 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 2,500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும், ரூ.3,000 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், 885 மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும்.

விழாவில் விஐடி வேந்தர் கோ. விசுவநாதன், “ஆசிரியர் பணியே ஒரு தொண்டு. கல்வி முன்னேறினால்தான் நாடு முன்னேறும். தமிழக பள்ளிக்கல்வி தென்கொரியா மாதிரியாக மாற வேண்டும்,” எனக் கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN School Teachers pocso case report


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->