எங்கும் தமிழ். எதிலும் தமிழ் இனி இருக்காது, தமிழை ஒழித்ததே திராவிடத்தின் முதல் சாதனை: சீறிய சீமான்..! - Seithipunal
Seithipunal


''தமிழை ஒழித்தது  திராவிடத்தின் ஒரே சாதனை தான்,'' என்று  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். திருச்செந்தூரில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தக்கோரி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சீமான் பேசியதாவது: 

தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என்ற வரலாற்று உண்மையை ஏற்க மறுத்த கன்னடர்கள் கிளர்ந்து எழுந்தனர். தமிழை இழிவுபடுத்தி பேசினர். ஆனால், தமிழுக்கும், தமிழருக்கும் ஆதரவாக இங்கு ஒருவர் கூட கருத்து எழுப்பவில்லை. கன்னடர் கருத்தை கண்டித்து பேசவில்லை என்பது, கர்நாடகாவில் கன்னடர்கள் இன உணர்வோடு இருக்கிறார்கள். தமிழர்கள் அப்படி இல்லை என்பது நிரூபித்து காட்டியது என்று சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன், மொழிப்போர் மறவர்கள் நம் முன்னவர்கள். அப்போது ஏற்பட்ட மொழி புரட்சியில் அதிகாரத்திற்கு வந்தவர்கள் திராவிடர்கள் என்றும்,  அந்த அரியணையில் அமர்ந்த உடன் முடிவெடுத்தார்கள். தமிழனுக்கு உயிர் உடலில் இல்லை. மொழியில் இருக்கிறது என்று. தமிழுக்கு, தமிழனுக்கு உயிர் மொழியில் இருக்கிறது. இதனை அழிக்க வேண்டும் என முடிவெடுத்தார்கள். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என முன்னோர்கள் சொன்னார்கள் என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் மதுரையில் நடந்த மாநாட்டில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என முதல்வர் சொன்னார். ஆனால், அது முற்றுப்பெறவில்லை. என்றும், எங்கும் தமிழ். எதிலும் தமிழ் இனிமேல் இருக்காது. ஏனெனில் இது திராவிட மாடல் ஆட்சி. திராவிடர்களின் கோட்பாடு. இனி இருக்காது என்பது தான் அவர்களின் நிலைப்பாடு என்று பேசியுள்ளார்.

அத்துடன், ஈ.வெ.ராமசாமி தமிழில் பெயர் வைப்பது பழமை என்றார் என்றும், தமிழில் எழுதுவது, பேசுவது படிப்பது எல்லாம் பத்தாம் பசலித்தனம். தமிழில் படித்தால் வேலை கிடைக்குமா, சோறு கிடைக்குமா என்று கேள்வி எழுப்பியவர். தமிழில் படித்தால் பிச்சைகூட எடுக்க முடியாது என சொன்னவர் ஈ.வெ.ராமசாமி. தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றார்கள். தமிழ் முட்டாள்களின் பாஷை என்றார்கள். இதனை சொன்னவரை தமிழரின் தலைவன் என்றார்கள் என்று கடுமையாக விமரிசித்து பேசியுள்ளார்.

இதனை தொடர்ந்து சீமான் அங்கு குறிப்பிடுகையில், 'சிவனும் தமிழும் வேறு இல்லை. முருகனும் தமிழம் வேறு இல்லை.தமிழ் கடவுள் முருகன். தமிழே முருகன் தான்.'' என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

2026 தேர்தலில் திராவிடனுக்கு தலைமுழுக்கு செய்யவில்லை என்றால் நாம் வாழ்ந்து பயனில்லை என்றும், இவர்களை போன்று பொய் பிரட்டுகளை கட்டமைத்தவர்கள் உண்டா  எனவும், கருணாநிதிக்கும் செம்மொழிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது..?  சில மொழிகள் பிறந்து சிறக்கும்.. ? அப்படி சிறந்து பிறந்த மொழி தமிழ் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், திராவிடர்கள் சாதித்தது ஒன்றே ஒன்று தான். அவர்களின் சாதி ஒழிப்பு ஹம்பக். சமூக நீதி வெட்டிப்பொய். பெண்ணிய உரிமை ஏமாற்று வேலை. எல்லாமே ஏமாற்று. அவர்களின் ஒரே சாதனை தமிழை ஒழித்தது தான். தமிழை ஆங்கிலம் கலந்து பேசி அழித்தான் என்று சீமான் ஆவேசம் அடைந்து பேசியுள்ளார்.

மேலும், தமிழை ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். இந்த நிலையை மாற்றாத வரை உறக்கமில்லை என்ற உறுதியை ஏற்க வேண்டும் என்றும்,  ஒடிசாவில் தமிழனை ஆட்சி செய்ய விடுவதா என கெட்டவர்கள், இங்கு வந்து தமிழ் தமிழ் என பேசுகிறார்கள். என்று சீமான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman says that the first achievement of Dravidianism was the eradication of Tamil


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->