திடீர் திருப்பம்: ஓ.பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கக்கோரி மனு! அப்பாவு சொன்ன செய்தி!
ADMK OPS MLA EPS assembly
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்கக் கோரி அளிக்கப்பட்ட மனுவைச் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.
தேனி தொகுதியைச் சேர்ந்த மிலானி என்பவர் அளித்த இந்த மனுவில், அதிமுக எம்எல்ஏவாக இருந்த ஓபிஎஸ், அதே கட்சியின் வேட்பாளரை எதிர்த்து மக்களவை தேர்தலில் போட்டியிட்டதைக் காரணமாகக் கூறி, தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
இதனையடுத்து, மனுவை பேரவைத் தலைவர் பரிசீலனைக்கு எடுத்துள்ளார். சட்டவியல் விளக்கங்கள் பெற்று பிறகு, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனச் செயலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக பாஜக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதிமுக சின்னம், கொடியைப் பயன்படுத்த நீதிமன்றம் தடையும் விதித்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
ADMK OPS MLA EPS assembly