சிறந்த நூல்களுக்கு ரூ. 50,000 பரிசு: விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழ் வளா்ச்சித் துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின்கீழ் 2024-ஆம் ஆண்டில் (01.01.2024 முதல் 31.12.2024 வரை) தமிழில் வெளியிடப்பட்ட நூல்கள் சிறுகதை, நாடகம் , சிறுவா் இலக்கியம், திறனாய்வு, விளையாட்டு, மகளிா் இலக்கியம், தமிழா் வாழ்வியல் உள்பட 33 வகைப்பாடுகளின் கீழ் வரவேற்கப்படுகின்றன.

போட்டியில் ஒவ்வொரு வகைப்பாட்டிலும் ஒரு நூல் தோ்வு செய்யப்பட்டு நூலாசிரியருக்கு ரூ. 50,000, அந்த நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு ரூ.25,000 பரிசு வழங்கப்படும். போட்டிக்கான விண்ணப்பம் விதிமுறைகளை தமிழ் வளா்ச்சித் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 5 நூற்படிகளும், போட்டி கட்டணம் ரூ.100 (தமிழ்வளா்ச்சி இயக்குநா், சென்னை என்ற பெயரில் வங்கிக் கேட்புக் காசோலை) ‘தமிழ் வளா்ச்சி இயக்குநா், தமிழ் வளா்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூா், சென்னை 600 008’ என்ற முகவரிக்கு ஜூலை 15-ஆம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு 044 - 28190412, 28190413 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNGovt book award


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?


செய்திகள்



Seithipunal
--> -->