தமிழகம் | போலீஸ் எஸ்.ஐ தேர்வில் முறைகேடு - தேர்வர்கள் அளித்த பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


காவல்துறை துணை ஆய்வாளர் (போலீஸ் எஸ்.ஐ) தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக, தேர்வர்கள் புகார் அளித்துள்ளனர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், காவல்துறையில் காலியாக இருந்த காவல் துணை ஆய்வாளர் பதவியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி இதற்கான எழுத்துத் தேர்வு நடைபெற்ற நிலையில், தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. 

தேர்வு முடிவுகளை பார்த்த தேர்வர்கள், இந்த தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று புகார் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக தேர்வு மையங்களில் முறைகேடு நடந்திருப்பதாக அதிக வாய்ப்பு உள்ளதாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளியான தேர்வு முடிவுகளின்படி, அடுத்தடுத்து தேர்வெழுதியவர்கள் (எண் வரிசை மாறாமல்) தேர்ச்சி பெற்று இருப்பது தான் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் விரைவில் விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Police SI Exam Result 2023


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->