முக்கிய ஆலோசனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.. வெளியாகப்போகும் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தெற்கு அந்தமான், அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது. இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தெற்கு மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது.

இது இன்று காலை புயலாக வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 2 ஆம் தேதி மாலை இலங்கை கடந்து குமரி கடல் பகுதியில் நிலைகொள்ளும். இது குமரி கடல் பகுதியில் இரண்டு நாட்கள் நிற்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த புயலுக்கு புரெவி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த புயல் காரணமாக தமிழகத்தில் இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். மேலும், தென் மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் கனமழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tn cm meeting for monsoon


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->