திண்டிவனத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!! - Seithipunal
Seithipunal


கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்தவகையில், கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து கடலூரில் இருந்து சென்னை தாம்பரம் வரை செல்லும் அரசு பேருந்து 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு கடலூரில் இருந்து புறப்பட்டுள்ளது.

கடலூரில் இருந்து தாம்பரம் நோக்கி அரசு பேருந்து வந்துகொண்டிருந்தபொது திண்டிவனம் பைபாஸ் சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திண்டிவனம் சாலையில் உள்ள மீடியமில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணித்த 60 பயணிகள் மற்றும் ஓட்டுநர், நடத்துனர் உட்பட அனைவரும் அதிர்ஷ்ட வசமாக பெரிய காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.

அரசு பேருந்து சாலையில் கவிழ்ந்ததால், சென்னை - திருச்சி தேசிய நெடுசாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பேருந்தை கிரேன் உதவியுடன் அப்புற படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tindivanam government bus accident


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->