வீடியோவால் பறிபோன மூன்று உயிர் - திருவள்ளூரில் பயங்கரம்.!! - Seithipunal
Seithipunal


வீடியோவால் பறிபோன மூன்று உயிர் - திருவள்ளூரில் பயங்கரம்.!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகம் உள்ளது. இந்த முகாமில் தயாளன், சார்லஸ் மற்றும் ஜான் உள்ளிட்ட மூன்று பேர் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், இவர்கள் மூன்று பேரும் பெத்திக்குப்பத்தில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் தாங்கள் இருசக்கர வாகனத்தில் செல்வதை வீடியோ எடுத்தபடி சென்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் முன்னாடி சென்ற லாரியை வளைவில் முந்தி செல்ல முயன்றுள்ளனர். அந்த நேரத்தில் அவர்கள் மூன்று பேரும் விபத்தில் சிக்கினர். இந்த விபத்தில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதைப்பார்த்த ச வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இளைஞர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தியதாக லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three youths died for bike accident in tiruvallur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->