பிள்ளையுடன் தனியாக சென்ற தந்தை.. தாயை கேட்டப்போது ஏற்ப்பட்ட அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி அருகில் ஒரு கணவன் தனது மனைவியை கொலை செய்து மாந்தோப்பில் புதைத்த சம்பவம் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டிக்கு அருகே கரடிபுத்தூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இதில் தர்மய்யா என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த இவர் மாந்தோப்பில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். 

சில நாட்களுக்கு முன் தனது குழந்தையுடன் தர்மையா சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது நல்ல மது போதையில் இருந்த தர்மையாவிடம் மனைவி எங்கே ஏன் தனியாக வந்திருக்கிறாய் என்று உறவினர்கள் கேட்டுள்ளனர். அப்போது மனைவியை கொன்று தோப்பில் புதைத்து விட்டதாக அவர் போதையில் உளறியுள்ளார். 

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்த நிலையில் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தில் மனைவி லட்சுமி உடலை தோண்டி பிணமாக எடுத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தர்மையா தலைமறைவாகியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thiruvallur Men Killed Wife 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->