வயிற்று வலியால் துடித்த பெண்மணி.. மகள்களுடன் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி அம்மாச்சியாபுரம் கிராமத்தை சார்ந்தவர் சுரேஷ் குமார். இவர் கொத்தனாராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செண்பகவள்ளி (வயது 29). இவர்கள் இருவருக்கும் சுரேனா என்ற 10 வயது குழந்தையும், சுரே ஸ்ரீ என்ற 7 வயது குழந்தையும் என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 

இதில், செண்பகவள்ளி கடந்த 2 வருடமாகவே தீராத வயிற்று வலியின் காரணமாக அவதியடைந்து வந்த நிலையில், பல மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெற்றும் பலனில்லை. இருந்த போதிலும் வயிற்று வலி குணமாகாத சூழ்நிலையில், இதனால் கடுமையான மன விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

இந்த சூழ்நிலையில், நேற்று மீண்டும் அவருக்கு வயிற்று வலி கடுமையாக ஏற்படவே, தீராத விரக்தியில் இருந்த பெண்மணி தற்கொலை முடிவு எடுத்துள்ளார். மேலும், நான் இறந்துவிட்டால், தனது மகள்கள் என்ன செய்வார்கள் என்று எண்ணி, அவர்களுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்தியுள்ளார். 

விஷத்தை குடித்த மூவரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில், எதற்ச்சையாக பணிக்கு சென்ற சுரேஷ்குமார் வீட்டிற்கு வந்த போது மூவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக இருந்துள்ளனர். இவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றும் பலனில்லை.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த கண்டமனூர் காவல் துறையினர், மூவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Theni Mother and 2 Daughter suicide police investigation


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->