டீப்ஃபேக் சர்ச்சையில் சிக்கிய மிருணாள் தாகூர்!"சட்ட நடவடிக்கை எடுப்பேன்" என கடும் எச்சரிக்கை!
Mrunal Thakur embroiled in deepfake controversy Issues stern warning I will take legal action
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மாற்றியமைத்து பரப்பும் டீப்ஃபேக் (Deepfake) சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நடிகை மிருணாள் தாகூரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, தனது சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் மிருணாள் தாகூர் வெளியிட்டுள்ள பதிவில், தனது உருவத்தை பயன்படுத்தி போலியான டீப்ஃபேக் புகைப்படங்கள் உருவாக்கப்படுவதும், அவற்றை பகிர்வதும் சட்டவிரோதமான செயல் என்றும், இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும், தனது அடையாளத்தை தவறாக பயன்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் பல நடிகைகளின் உருவங்களை மாற்றியமைத்து போலியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டுள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டதுடன், சில வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மிருணாள் தாகூரும் நேரடியாக எச்சரிக்கை விடுத்திருப்பது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
துல்கர் சல்மானுடன் நடித்த "சீதா ராமம்" திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடையே பிரபலமான மிருணாள் தாகூர், தற்போது இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். அவருடைய "Pooja Meri Jaan" திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
English Summary
Mrunal Thakur embroiled in deepfake controversy Issues stern warning I will take legal action