பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை மயங்கி விழுந்து உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


பாறசாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில்  மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது ஆசிரியை மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் மாராயமுட்டம் பகுதியை சேர்ந்த 49 வயதான பெண் வினோதினி  பாறசாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கேரள கல்வித்துறையின் சிறப்பு திட்டத்தின் கீழ் சிறுவர்களுக்கு கம்ப்யூட்டர் பாடம் அரசு பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது,அந்தவகையில்  ஆசிரியை வினோதினி  நேற்று முன்தினம் காலையில் திருவனந்தபுரம் அருகே உள்ள ஆனாவூர் அரசு பள்ளியில் கேரள கல்வித்துறையின் சிறப்பு திட்டத்தின் கீழ் சிறுவர்களுக்கு வகுப்பறையில் கம்ப்யூட்டர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். 

அப்போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டடு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்த அவர் சிறிது நேரத்தில் வினோதினி திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

இதைக்கண்டு அங்கிருந்த சக ஆசிரியர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஆசிரியை வினோதினி பரிதாபமாக உயிரிழந்தார். வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது ஆசிரியை மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பாறசாலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The teacher who was conducting the lesson fainted and died


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->