கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் இன்றைய நீர்வரத்து எவ்வளவு தெரியுமா..?
Do you know how much water flowing Okenakkal today heavy rain
கடந்த சில தினங்களாக, கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு மண்டலங்களில், இடியுடன் கூடிய கனமழை கொட்டிக் கொண்டு வருகிறது. இதன் தாக்கத்தில் கிருஷ்ணராஜசாகர் (KRS), கபினி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.
மேலும், அணையின் பாதுகாப்பு நடவடிக்கையாக, அங்குள்ள அதிகாரிகள் தமிழகத்திற்குள் காவிரி ஆற்றில் பெருமளவு தண்ணீரை திறந்து விட்டனர். இதன் விளைவாக, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நேற்று மட்டும் 16000 கனஅடி நீர் வரத்து பதிவானது.

இதைத் தொடர்ந்து, இன்றும் அதே அளவு பெருக்கெடுத்து ஓடுகிறது.இதனிடையே, நீரின் இந்த ஆர்ப்பரிப்பு, ஒகேனக்கல்லின் சினிபால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட பிரபல நீர்வீழ்ச்சிகளில் பசுமை பூண்ட சத்தமிட்டுக் கொட்டும் காட்சியாக மாறியுள்ளது.
மேலும், பரிசலில் சவாரி செய்து காவிரி ஆற்றின் கொந்தளிப்பை ரசித்த சுற்றுலாப் பயணிகள், அங்குள்ள சிறப்பு மீன் விருந்து சுவைத்து, பூங்காவில் அமர்ந்து மகிழ்ச்சியில் நேரத்தை கழித்தனர்.
இதனை அடுத்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்தை எச்சரிக்கையுடன் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
English Summary
Do you know how much water flowing Okenakkal today heavy rain