சென்னையில் பயங்கரம்.! மாமியாரை சரமாரியாக கத்தியால் குத்திக்கொன்ற மருமகன்..! - Seithipunal
Seithipunal


சென்னையில் மாமியாரை கத்தியால் குத்தி மருமகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை புழுதிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள்(58). இவருடன் மகள் விஜயலட்சுமி, மருமகன் ஏழுமலை ஆகியோர் வசித்து வந்தனர். இந்நிலையில், விஜயலட்சுமிக்கும், கணவர் ஏழுமலைக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த விஜயலட்சுமி கடந்த வாரம் 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேசென்றுவிட்டார். 

இதைத்தொடர்ந்து மனைவி பிரிந்து சென்றதற்கு, மாமியாரிடம் ஏழுமலை தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து வழக்கம்போல் மடிப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்புக்கு வேலைக்கு வந்த முனியம்மாளிடம், மனைவியை மற்றும் குழந்தையை நீதான் மறைத்து வைத்திருப்பதாக கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். 

இதில் இவர்களிடையே தவறாறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஏழுமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியாரை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் முனியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பரிதாபமாக முனியம்மாள் உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய ஏழுமலையை கைது செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The son in law who murder his mother in law in Chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->