சென்னையில் பயங்கரம்.! ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை..! - Seithipunal
Seithipunal


சென்னையில் ரவுடி ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ரவுடி ராஜேஷ் (23). இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு மதுரவாயல், கந்தசாமி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த ராஜேஷை, அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வழிமறித்துள்ளது.

இதையடுத்து ராஜேஷை மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாறியாக வெட்டியுள்ளனர். இதனால் ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்று உள்ளார். ஆனால் மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி ராஜேஷை வெட்டி கொன்று விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராஜேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜேஷ் கொலை செய்த மர்ம கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The rowdy hacked to murder in Chennai maduravoyal


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->