கிணற்றில் விழுந்த மலைபாம்பை காப்பாற்ற சென்றவர்...அந்த பாம்பாலேயே உயிரிழந்த சோகம்.!
The person who went to save the mountain snake was killed in kirishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிணற்றில் விழுந்த மலைப்பாம்பை காப்பாற்ற சென்றவர், அந்த பாம்பாலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மேல்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சின்னசாமி. இவருடைய 50 அடி ஆழக்கிணற்றில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மலைப்பாம்பு விழுந்துள்ளதை சின்னசாமி பார்த்துள்ளார்.
இந்த மலைப்பாம்பை கிணற்றிலிருந்து வெளியே எடுப்பதற்காக இன்று நடராஜ் என்பவர் கிணற்றில் இறங்கியுள்ளார். இதையடுத்து மலைபாம்பை கிணற்றின் பாதி வரை தூக்கி வந்த நடராஜ், எடை தாங்க முடியாமல் மலை பாம்பும், அவரும் கிணற்றில் விழுந்து உள்ளனர்.
அப்பொழுது மலைப்பாம்பு நடராஜனை இறுக்கி பிடித்துள்ளது. இதனால் நடராஜ் சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு நடராஜனை மீட்டனர். ஆனால் நடராஜன், மலைப்பாம்பு இறுக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
The person who went to save the mountain snake was killed in kirishnagiri