கல்லூரி சேர்க்கைக்கான ஆணை..நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!
The order for college admission was issued by the District Collector under the Chief Ministers scheme
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி என்ற உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் மாணவர் மாணவர்களுக்கு கல்லூரி சேர்க்கைக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் அவர்கள் வழங்கினார்கள்.
தர்மபுரி மாவட்டம் பச்சமுத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி என்ற உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் மாணவர் மாணவர்களுக்கு கல்லூரி சேர்க்கைக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் அவர்கள் வழங்கினார்கள். உடன் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் மணி கல்லூரி கல்வி இணை இயக்குனர் ராமலட்சுமி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீபா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து உழவாரப்பணி நடைபெற்றது.
தேவகோட்டை காஸ் மாஸ் லயன்ஸ் சங்கம் மற்றும் செயின்ட் பால் கல்வியியல் கல்லூரி இணைந்து உழவாரப்பணி மேற்கொண்டனர். தேவகோட்டை நகர சிவன் கோவில் மற்றும் வெளி முத்திபழம் பதிநாதர் சிவன்கோவில் ஆகிய இரு ஆலயங்களையும் சுத்தம் செய்யும் பணியை ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் செய்தனர்.இந்த நிகழ்ச்சியில் காஸ் மாஸ் லயன்ஸ் சங்க தலைவர் மலைராஜன், செயலாளர் நித்தில், பொருளாளர் மணி, செயின்ட் பால் கல்வியியல் கல்லூரி தாளாளர் ராஜா,சிவன்கோவில் நிர்வாகிகள் அருணாசலம்,கண்ணன், ஐயப்பன்,வெங்கடாசலம். சிவன்கோவில் ரவி குருக்கள் . பொறியியல் கல்லூரி NSS அலுவலர்.முனைவர்.இராஜேஸ்வரி.பேரா.ரூசோ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாட்டை தொடர்பு அலுவலர் கவிஞர்.கி.ஏகோஜிராவ் செய்திருந்தார்.
English Summary
The order for college admission was issued by the District Collector under the Chief Ministers scheme