சென்னையை குளிர்வித்த மழை..அலுவலம் முடிந்து வீடு திரும்பும் மக்கள் அவதி!
The rain that cooled Chennai People struggling to return home after the work is over
சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அலுவலம் முடிந்து வீடு திரும்பும் மக்கள் அவதியடைந்தனர். அதேவேளை, மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பெய்யும் என என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.இந்த மழை இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தது.
கடந்த சில நாட்களாக சென்னையில் வெயில் வெளுத்துவங்கிய நிலையில் இன்று காலை பரவலாக மழை பெய்தது. இந்தநிலையில் ஒரிசா - மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 25ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் . இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. எழும்பூர், சென்டிரல், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதன் காரணமாக அலுவலம் முடிந்து வீடு திரும்பும் மக்கள் அவதியடைந்தனர். அதேவேளை, மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.
English Summary
The rain that cooled Chennai People struggling to return home after the work is over